Return to Video

Sri Kamakshi Amman Virutham

  • 0:02 - 0:09
    ஸ்ரீ காமாக்ஷியம்மன் விருத்தம்
  • 0:19 - 1:18
    மங்களம் சேர், காஞ்சிநகர் மன்னு காமாட்சி மிசை
    துங்கமுள நற்பதிகம் சொல்லவே - திங்கட்
    பயமருவும் பணியணியும் பரமன் உளந்தனில் மகிழும்
    கயமுக ஐங்கரன் இருதாள் காப்பு
    கயமுக ஐங்கரன் இருதாள் காப்பு
  • 1:30 - 1:48
    சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே! சுக்ரவாரதிளுனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய்
  • 1:49 - 2:07
    சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றி விடுவாய்.... ஜெகமெல்லாம் உன் மாயை புகழ என்னாலாமோ சிறியனால் முடிந்திராது
  • 2:07 - 2:25
    சொந்தவுன் மைந்தனாம் என்தனை இரட்சிக்க சிறிய கடனுள்ளதம்மா!....சிவசிவ மஹேஸ்வரி பரமனிட ஈஸ்வரி சிரோன்மணி மனோன் மணியுநீ!
  • 2:25 - 2:51
    அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீயே! .....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 2:59 - 3:17
    பத்து விரல் மோதிரம் எத்தனை பிரகாசமானது பாடகம் தண்டை கொலுசும் பட்சைவைடூரியம் இச்சையா இழைத்திட்ட பாதச் சிலம்பினொலியும்
  • 3:17 - 3:34
    முத்து மூக்குத்தியும் இரத்தின பதக்கமும் மோகன மாலைஅழகும்....முழுதும் வைடூரிய புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும்
  • 3:34 - 3:50
    சுத்தமாய் இருக்கின்ற காதினிர்க் கம்மலுஞ் செங்கையில் பொன்கங்கணம்.... ஜெயமெலாம் விலைபெற முகமெலாம் ஒளியுற்ற சிறகாது கொப்பினழகும்
  • 3:50 - 4:16
    அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனார் சொல்ல திறமோ?..... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 4:25 - 4:43
    கதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்
    குறைகளைச் சொல்லி நின்று....
    கொடுமையாய் என்மீது வறுமையாய் வைத்துநீ
    குழப்பமாய் இருப்பதேனோ?
  • 4:43 - 5:01
    சதிகாரிஎன்று நானறியாமல் உந்தனைச் சதமாக நம்பினேனே! ....சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க சாதகமுனக்கில்லையோ?
  • 5:01 - 5:19
    மதிபோல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே! .....மாயனது தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே!
  • 5:19 - 5:42
    அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன்
    அன்பு வைத்தென்னை ஆள்வாய்....
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே!
    அம்மை காமாட்சி உமையே!
  • 5:50 - 6:09
    பூமியிற் பிள்ளையாய் பிறந்து வளர்ந்து நான் பேரான ஸ்தலமும் அறியேன்.... பெரியோர்கள் தரிசனம் ஒரு நாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடிஅறியேன்
  • 6:09 - 6:26
    வாமிஎன்றுன்னை சிவகாமி என்றே சொல்லி வாயினாற் பாடி அறியேன்.... மாதா பிதாவினது பாதத்தை நானுமே வணங்கி கொண்டாடி அறியேன்
  • 6:26 - 6:43
    சாமியென்றே சொல்லி சதுருடன் கைகூப்பிச்
    சரணங்கள் செய்துமஅறியேன்....
    சத்குருவின் பாதார விந்தங்களை கண்டு
    சாஷ்டாங்க தண்டனரியேன்
  • 6:43 - 7:11
    ஆமிந்த பூமியிலடியேனைப் போல் மூடன் ஆச்சி நீ கண்டதுண்டோ?.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 7:18 - 7:35
    பெற்றதாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியமாயிருந்தேனம்மா... பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன் புருஷனை மறந்தேனம்மா
  • 7:35 - 7:53
    பக்தனாயிருந்து முன் சித்தமும் இறங்காமல்
    பாராமுகம் இருந்தால்
    பாலன் நானெப்படி விசனமில்லாமலே
    பாங்குடன் இருப்பதம்மா ?
  • 7:53 - 8:09
    இத்தனை மோசங்களாகாது ஆகாது இது தர்மமல்ல அம்மா எந்தனை ரக்ஷிக்க சிந்தனைக ளில்லையோ இது நீதியல்ல அம்மா
  • 8:10 - 8:39
    அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தாயோ அதை எனக்கருள் புரிகுவாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 8:48 - 9:06
    மாயவன் தங்கைநீ மரகதவல்லிநீ மனிமந்த்ரக் காரி நீயே.... மாயசொரூபிநீ மகேஸ்வரியுமானநீ மலையரையன் மகளான நீ!
  • 9:06 - 9:25
    தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ தயாநிதி விசாலாட்சி நீ.... தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும்நீ சரவணனை ஈன்றவளும் நீ!
  • 9:25 - 9:43
    பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில் பேர்பெற வளர்ந்தவளும் நீ.... ப்ரணவஸ்வரூபி நீ பிரசன்ன வல்லி நீ பிரியவுண்ணா மலையும் நீ!
  • 9:43 - 10:08
    ஆயிமகமாயி நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்ட வல்லி நீயே.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 10:43 - 11:04
    பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகள் சொல்வதில்லையோ?.... பேய்பிள்ளை ஆனாலும் தான்பெற்ற பிள்ளையை பிரியமாய் வளர்ப்ப தில்லையோ?
  • 11:04 - 11:22
    கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விடும் கதறி நான் அழுத குரலில்.... கடுகதனிலெட்டி லொரு கூறுவதி லாகிலுன் காதினுள் நுழைந்த தில்லையோ?
  • 11:22 - 11:40
    இல்லாத வன்மங்களென்மீதில் யேனம்மா இனி விடுவதில்லை சும்மா.... இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது இது தரும மல்ல அம்மா
  • 11:40 - 12:03
    எல்லோரும் உன்னையே சொல்லியே யேசுவர்
    இது நீதியல்ல அம்மா....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 12:14 - 12:33
    முன்னையோர் ஜென்மாந்த்ரம் என்னென்ன பாவங்கள்
    இம்மூடன் செய்தானம்மா....
    மெய்யன்று பொய் சொல்லி கைதனில் பொருள்தட்டு
    மோசங்கள் பண்ணினேனோ?
  • 12:33 - 12:50
    என்னமோ தெரியாது இக்ஷனம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா.... ஏழை நான் செய்தபிழை தாய் பொருத்தருள் தந்து என் கவலை தீரும்மம்மா!
  • 12:50 - 13:09
    சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே சிறு நாணம் ஆகுதம்மா.... சிந்தினைகள் என்மீதில் வைத்து நர்பாக்கியமருள் சிவசக்தி காமாக்ஷி நீ!
  • 13:09 - 13:38
    அன்னவாகனமேரி ஆனந்தமாக உன் அடியேன் முன் வந்து நிற்பாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 13:46 - 14:06
    எந்தனைப் போலவே ஜெனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க.... யான் செய்த பாவமோ இத்தனை வருமயிலுன் அடியேன் தவிப்பதம்மா
  • 14:06 - 14:24
    உன்னையே துணை என்றுரிதியாய் நம்பினேன் உன் பாதம் சாட்சியாக.... உன்னையன்றி வேறு துணை இனியாரயுங் காணேன் உலங்கந்தனில் எந்தனுக்கு
  • 14:24 - 14:43
    பிள்ளை என்றெண்ணி நீ சொல்லாமல் என் வறுமை போக்கடிதென்னை ரட்சி....
    பூலோகம் மெச்சவே பாலன் மார்கண்டன் போல்
    பிரியமாய் காத்திடம்மா
  • 14:43 - 15:06
    அன்னையே இன்னும் உன்னடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 15:14 - 15:33
    பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடு என்னைப் பாங்குடன் இரட்சிக்கவும்.... பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கருள் புரியவும்
  • 15:33 - 15:51
    சீர்பெற்ற தேகத்தை சிறுபிணிகள் அணுகாமல் செங்கலிய னணுகாமலும்....சேயனிட பாக்கியம் செல்வங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
  • 15:51 - 16:08
    பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா....பிரியமாயுன்மீதில் சிறியனான் சொன்னகவி பிழைகளைப் பொறுத்து ரட்சி
  • 16:08 - 16:37
    ஆறுதனில் மணல் குவித்தரிய பூஜை செய்த என்
    அம்மை ஏகாம்பரி... நீயே...
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே!
    அம்மை காமாட்சி உமையே!
    அம்மை காமாட்சி உமையே!
  • 16:45 - 17:04

    எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
    இப்பூமி தன்னிலம்மா....
    இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
    இனி ஜெனனமெடுதிடாமல்
  • 17:04 - 17:22
    முக்திதர வேண்டுமென்றுன்னையே தொழுத நான் முக்காலும் நம்பினேனே....முன்னும்பினும் தோணாத மனிதரை போலநீ முழித்திருக்காதே அம்மா
  • 17:22 - 17:40
    வெற்றிபெற உன் மீது பக்தியாய் சொன்ன கதை விருத்தங்கள் பதினொன்றையும்....விருப்பமுடன் நீ கேட்டு அளித்திடும் செல்வத்தை விமலனாய் ஏசப் போறார்
  • 17:40 - 18:14

    அத்தனிட பாகத்தை விட்டு வந் தென்னரும்
    குறைகளை தீருமம்மா
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே!
    அம்மை காமாட்சி உமையே!
    அம்மை காமாட்சி உமையே!
    யே......
  • 18:14 -
    ஸ்ரீ காமாக்ஷியம்மன் விருத்தம் with Tamil sub-titles - Jan 2012
Title:
Sri Kamakshi Amman Virutham
Description:

Combination of videos with Tamil sub-titles; The idea is to provide video and lyrics to read-along at the same time

more » « less
Video Language:
Tamil
Duration:
18:21
arvindaa edited Tamil subtitles for Sri Kamakshi Amman Virutham
arvindaa edited Tamil subtitles for Sri Kamakshi Amman Virutham
arvindaa added a translation

Tamil subtitles

Incomplete

Revisions