0:00:01.741,0:00:08.578 ஸ்ரீ காமாக்ஷியம்மன் விருத்தம் 0:00:19.156,0:01:18.182 மங்களம் சேர், காஞ்சிநகர் மன்னு காமாட்சி மிசை[br]துங்கமுள நற்பதிகம் சொல்லவே - திங்கட்[br]பயமருவும் பணியணியும் பரமன் உளந்தனில் மகிழும்[br]கயமுக ஐங்கரன் இருதாள் காப்பு[br]கயமுக ஐங்கரன் இருதாள் காப்பு 0:01:30.036,0:01:48.489 சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே! சுக்ரவாரதிளுனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய் 0:01:49.111,0:02:07.361 சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றி விடுவாய்.... ஜெகமெல்லாம் உன் மாயை புகழ என்னாலாமோ சிறியனால் முடிந்திராது 0:02:07.361,0:02:25.350 சொந்தவுன் மைந்தனாம் என்தனை இரட்சிக்க சிறிய கடனுள்ளதம்மா!....சிவசிவ மஹேஸ்வரி பரமனிட ஈஸ்வரி சிரோன்மணி மனோன் மணியுநீ! 0:02:25.350,0:02:51.335 அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீயே! .....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 0:02:59.305,0:03:16.766 பத்து விரல் மோதிரம் எத்தனை பிரகாசமானது பாடகம் தண்டை கொலுசும் பட்சைவைடூரியம் இச்சையா இழைத்திட்ட பாதச் சிலம்பினொலியும் 0:03:16.766,0:03:33.856 முத்து மூக்குத்தியும் இரத்தின பதக்கமும் மோகன மாலைஅழகும்....முழுதும் வைடூரிய புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும் 0:03:33.856,0:03:49.785 சுத்தமாய் இருக்கின்ற காதினிர்க் கம்மலுஞ் செங்கையில் பொன்கங்கணம்.... ஜெயமெலாம் விலைபெற முகமெலாம் ஒளியுற்ற சிறகாது கொப்பினழகும் 0:03:49.785,0:04:16.158 அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனார் சொல்ல திறமோ?..... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 0:04:24.650,0:04:43.051 கதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன் [br]குறைகளைச் சொல்லி நின்று....[br]கொடுமையாய் என்மீது வறுமையாய் வைத்துநீ[br]குழப்பமாய் இருப்பதேனோ?[br] 0:04:43.051,0:05:00.977 சதிகாரிஎன்று நானறியாமல் உந்தனைச் சதமாக நம்பினேனே! ....சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க சாதகமுனக்கில்லையோ? 0:05:00.977,0:05:19.367 மதிபோல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே! .....மாயனது தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே! 0:05:19.367,0:05:41.635 அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன்[br]அன்பு வைத்தென்னை ஆள்வாய்....[br]அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்[br]அம்மை காமாட்சி உமையே![br]அம்மை காமாட்சி உமையே![br] 0:05:49.823,0:06:09.058 பூமியிற் பிள்ளையாய் பிறந்து வளர்ந்து நான் பேரான ஸ்தலமும் அறியேன்.... பெரியோர்கள் தரிசனம் ஒரு நாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடிஅறியேன் 0:06:09.058,0:06:26.380 வாமிஎன்றுன்னை சிவகாமி என்றே சொல்லி வாயினாற் பாடி அறியேன்.... மாதா பிதாவினது பாதத்தை நானுமே வணங்கி கொண்டாடி அறியேன் 0:06:26.380,0:06:42.866 சாமியென்றே சொல்லி சதுருடன் கைகூப்பிச்[br]சரணங்கள் செய்துமஅறியேன்....[br]சத்குருவின் பாதார விந்தங்களை கண்டு[br]சாஷ்டாங்க தண்டனரியேன் 0:06:42.866,0:07:10.819 ஆமிந்த பூமியிலடியேனைப் போல் மூடன் ஆச்சி நீ கண்டதுண்டோ?.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 0:07:17.696,0:07:34.687 பெற்றதாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியமாயிருந்தேனம்மா... பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன் புருஷனை மறந்தேனம்மா 0:07:34.856,0:07:52.619 பக்தனாயிருந்து முன் சித்தமும் இறங்காமல்[br]பாராமுகம் இருந்தால்[br]பாலன் நானெப்படி விசனமில்லாமலே[br]பாங்குடன் இருப்பதம்மா ? 0:07:52.619,0:08:08.619 இத்தனை மோசங்களாகாது ஆகாது இது தர்மமல்ல அம்மா எந்தனை ரக்ஷிக்க சிந்தனைக ளில்லையோ இது நீதியல்ல அம்மா 0:08:10.011,0:08:38.549 அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தாயோ அதை எனக்கருள் புரிகுவாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 0:08:47.600,0:09:06.500 மாயவன் தங்கைநீ மரகதவல்லிநீ மனிமந்த்ரக் காரி நீயே.... மாயசொரூபிநீ மகேஸ்வரியுமானநீ மலையரையன் மகளான நீ! 0:09:06.500,0:09:24.709 தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ தயாநிதி விசாலாட்சி நீ.... தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும்நீ சரவணனை ஈன்றவளும் நீ! 0:09:24.709,0:09:42.774 பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில் பேர்பெற வளர்ந்தவளும் நீ.... ப்ரணவஸ்வரூபி நீ பிரசன்ன வல்லி நீ பிரியவுண்ணா மலையும் நீ! 0:09:42.774,0:10:07.577 ஆயிமகமாயி நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்ட வல்லி நீயே.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 0:10:43.086,0:11:03.835 பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகள் சொல்வதில்லையோ?.... பேய்பிள்ளை ஆனாலும் தான்பெற்ற பிள்ளையை பிரியமாய் வளர்ப்ப தில்லையோ? 0:11:03.835,0:11:21.854 கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விடும் கதறி நான் அழுத குரலில்.... கடுகதனிலெட்டி லொரு கூறுவதி லாகிலுன் காதினுள் நுழைந்த தில்லையோ? 0:11:21.854,0:11:40.500 இல்லாத வன்மங்களென்மீதில் யேனம்மா இனி விடுவதில்லை சும்மா.... இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது இது தரும மல்ல அம்மா 0:11:40.500,0:12:03.312 எல்லோரும் உன்னையே சொல்லியே யேசுவர்[br]இது நீதியல்ல அம்மா....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 0:12:13.820,0:12:32.600 முன்னையோர் ஜென்மாந்த்ரம் என்னென்ன பாவங்கள்[br]இம்மூடன் செய்தானம்மா....[br]மெய்யன்று பொய் சொல்லி கைதனில் பொருள்தட்டு[br]மோசங்கள் பண்ணினேனோ?[br] 0:12:32.600,0:12:50.100 என்னமோ தெரியாது இக்ஷனம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா.... ஏழை நான் செய்தபிழை தாய் பொருத்தருள் தந்து என் கவலை தீரும்மம்மா! 0:12:50.100,0:13:09.130 சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே சிறு நாணம் ஆகுதம்மா.... சிந்தினைகள் என்மீதில் வைத்து நர்பாக்கியமருள் சிவசக்தி காமாக்ஷி நீ! 0:13:09.130,0:13:38.415 அன்னவாகனமேரி ஆனந்தமாக உன் அடியேன் முன் வந்து நிற்பாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 0:13:46.050,0:14:06.205 எந்தனைப் போலவே ஜெனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க.... யான் செய்த பாவமோ இத்தனை வருமயிலுன் அடியேன் தவிப்பதம்மா 0:14:06.205,0:14:24.386 உன்னையே துணை என்றுரிதியாய் நம்பினேன் உன் பாதம் சாட்சியாக.... உன்னையன்றி வேறு துணை இனியாரயுங் காணேன் உலங்கந்தனில் எந்தனுக்கு 0:14:24.386,0:14:42.962 பிள்ளை என்றெண்ணி நீ சொல்லாமல் என் வறுமை போக்கடிதென்னை ரட்சி....[br]பூலோகம் மெச்சவே பாலன் மார்கண்டன் போல்[br]பிரியமாய் காத்திடம்மா 0:14:42.962,0:15:06.477 அன்னையே இன்னும் உன்னடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! 0:15:14.300,0:15:32.606 பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடு என்னைப் பாங்குடன் இரட்சிக்கவும்.... பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கருள் புரியவும் 0:15:32.606,0:15:50.750 சீர்பெற்ற தேகத்தை சிறுபிணிகள் அணுகாமல் செங்கலிய னணுகாமலும்....சேயனிட பாக்கியம் செல்வங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும் 0:15:50.750,0:16:08.365 பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா....பிரியமாயுன்மீதில் சிறியனான் சொன்னகவி பிழைகளைப் பொறுத்து ரட்சி 0:16:08.365,0:16:37.146 ஆறுதனில் மணல் குவித்தரிய பூஜை செய்த என்[br]அம்மை ஏகாம்பரி... நீயே...[br]அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்[br]அம்மை காமாட்சி உமையே![br]அம்மை காமாட்சி உமையே![br]அம்மை காமாட்சி உமையே! 0:16:44.635,0:17:04.000 [br]எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது[br]இப்பூமி தன்னிலம்மா....[br]இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்[br]இனி ஜெனனமெடுதிடாமல் 0:17:04.000,0:17:21.850 முக்திதர வேண்டுமென்றுன்னையே தொழுத நான் முக்காலும் நம்பினேனே....முன்னும்பினும் தோணாத மனிதரை போலநீ முழித்திருக்காதே அம்மா 0:17:21.850,0:17:40.014 வெற்றிபெற உன் மீது பக்தியாய் சொன்ன கதை விருத்தங்கள் பதினொன்றையும்....விருப்பமுடன் நீ கேட்டு அளித்திடும் செல்வத்தை விமலனாய் ஏசப் போறார் 0:17:40.014,0:18:14.264 [br]அத்தனிட பாகத்தை விட்டு வந் தென்னரும்[br]குறைகளை தீருமம்மா[br]அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்[br]அம்மை காமாட்சி உமையே![br]அம்மை காமாட்சி உமையே![br]அம்மை காமாட்சி உமையே![br]யே...... 0:18:14.264,9:59:59.000 ஸ்ரீ காமாக்ஷியம்மன் விருத்தம் with Tamil sub-titles - Jan 2012