-
நாம் அறுபத்தியெட்டிலிருந்து நாற்பத்திரண்டை கழிக்கலாம்.
-
இந்த கணக்கை எப்படி செய்வது என்று நான் காட்டிகிறேன்.
-
பிறகு, இந்த கணக்கை எதற்காக இந்த விதத்தில் செய்கிறோம் என்று சொல்கிறேன்.
-
இந்த கணக்கை செய்வதற்கு ஒரு விதம்- இந்த விதத்தைதான் நிறைய பேர் பயன்படுத்துவார்கள்-
-
முதலில் பெரிய எண்ணை மேலே எழுதுவோம்.
-
சிறிய எண்ணை அதற்கு அடியில் எழுதுவோம்.
-
நாம் அறுபத்தியெட்டு கழித்தல் நாற்பத்திரண்டை செய்யபோகிறோம்.
-
நீங்கள் ஒன்றை முக்கியமாக செய்யவேண்டும்-
-
எண்களை இடத்துக்கேற்ற விதத்தில் எழுதவேண்டும்.
-
அதனால், இரண்டை எட்டிற்கு அடியில் எழுதவேண்டும். (இந்த இரண்டு எண்களும் ஒன்றுகளின் இடத்தில் இருக்கின்றன.)
-
அதே வகையில், நான்கை ஆறிற்கு அடியில் எழுதுவோம். (இந்த இரண்டு எண்களும் பத்துகளின் இடத்தில் இருக்கின்றன.)
-
அப்புறம், இது எதற்காக செய்யவேண்டும் என்று நான் காண்பிக்கிறேன்.
-
அப்புறம், இது எதற்காக செய்யவேண்டும் என்று நான் காண்பிக்கிறேன்.
-
நாம் ஒன்றுகளின் இடத்தில் பார்த்தால், அங்கே எட்டு இருக்கிறது.
-
இந்த எட்டிலிருந்து நாம் இரண்டை கழிக்கபோகிறோம்.எட்டு கழித்தல் இரண்டு செய்தால், ஆறு வரும்.
-
இங்கு அதனை எழுதுவோம்
-
8-2 எனபது 6
-
8-2=6.
-
எட்டு கழித்தல் இரண்டு ஆறை தரும்.
-
நாம் இப்பொழுது பத்துகளின் இடத்தை பார்க்கலாம். இங்கே ஆறு கழித்தல் நான்கு இருக்கிறது.
-
பத்துகளின் இடத்தில் இந்த எண்கள் இருப்பதால், இது உண்மையிலே அறுவது கழித்தல் நாற்பதுதான்.
-
ஆறு கழித்தல் நான்கு இரண்டை தரும். 6 - 4 = 2
-
இந்த எங்கள் பத்துகளின் இடத்தில் இருப்பதால், இது "அறுவது கழித்தல் நாற்பது இருபதை தரும்" என்று சொல்வதுபோல்தான்.
-
இதை சிறிது நேரத்தில் விளக்குகிறேன்.
-
இந்த கணக்கை நாம் முடித்துவிட்டோம்.
-
68-42=26
-
இது சரியாக செய்திருக்கிறோமா என்று நீங்கள் பார்க்கலாம்.
-
நீங்கள் "இருபத்தியாறு கூட்டல் நாற்பத்திரண்டு" என்ற கணக்கை செய்தால், அறுபத்தியெட்டு வரும்.
-
பிறகு, இதை நீங்கள் செய்துபாருங்கள்-
-
நாற்பத்திரண்டு கூட்டல் இருபத்தியாறு அறுபத்தியெட்டுதானா என்று பாருங்கள்.
-
42 +26 = 68 தானா என்று சரி பார்க்கவும்
-
68 இர்க்கு சமமமாகும்
-
மேலும் 68 - 26 எவ்வளவு என்று சரி பார்க்கவும்
-
அது 42 இற்கு இணை ஆவதை காண்பீர்கள்
-
எனவே எவை இரண்டையும் நீங்களே சரி பார்த்து கொள்ளுங்கள்
-
நான் கடைசியாக, இந்த விதத்தில் கழித்தல் செய்வது ஏன் சரியாக இருக்கிறது என்று விளக்குகிறேன்.
-
நான் கடைசியாக, இந்த விதத்தில் கழித்தல் செய்வது ஏன் சரியாக இருக்கிறது என்று விளக்குகிறேன்.
-
நான் அறுபத்தியெட்டை அறுபது கூட்டல் எட்டாக பார்ப்பேன்.
-
இப்படி நீங்கள் எழுதவேண்டாம்-
-
அனால் உங்களுக்கு புரிவதற்கு இப்படி காட்டுகிறேன்.
-
"அறுபத்தியெட்டு" என்பது அறுபது கூட்டல் எட்டுதான்.
-
இதிலிருந்து நாம் நாற்பத்திரண்டை கழிக்கிறோம்.
-
ஆனால், "நாற்பத்திரண்டு" என்பது நாற்பது கூட்டல் இரண்டுதான்.
-
அதனால், நாம் நாற்பதை கழிக்கிறோம். இரண்டையும் கழிக்கிறோம்.
-
நாற்பத்திரண்டை கழிக்கிறோம்- நாற்பதையும் இரண்டையும் கழிக்கிறோம்.
-
அதனால், நீங்கள் இதை இரண்டு தனி கணக்குகளாக பார்க்கலாம்.
-
ஒன்றுகளின் இடத்தில் "எட்டு கழித்தல் இரண்டு" வைத்திருக்கிறோம்.
-
அதேதான் இங்கு செய்தோம். எட்டு கழித்தல் இரண்டு ஆறை தரும்.
-
பத்துகளின் இடத்தில், "அறுபது கழித்தல் நாற்பது" வைத்திருக்கிறோம். இது இருபதை தரும்.
-
அதனால், நாம் "இருபது கூட்டல் ஆறு" என்ற கணக்கை வைத்திருக்கிறோம்.
-
உங்களுக்கு இது இருபத்தியாறுதான் என்று தெரியும்.