பல ஆணாதிக்க மற்றும்
பழங்குடி சமூகங்களில்
பொதுவாக ஒரு தந்தை
தன் மகனால் அறியப்படுவார்
ஆனால் நான்
என் மகளால் அறியப்படும்
வெகுசில தந்தைகளில் ஒருவன்
அதில் எனக்கு மிகவும் பெருமை
(கரவொலி)
மலாலா தனது கல்வி மற்றும்
அவரது உரிமைகளுக்காக
2007 இல் பிரச்சாரத்தைத்
தொடங்கினார்
2011இல் அவரது முயற்சிகள்
கௌரவிக்கப்பட்டது,
தேசிய இளைஞர் அமைதி பரிசு
வழங்கப்பட்டது
அவள் மிகவும்
பிரபலமானாள்
தன் நாட்டின் மிக பிரபல
இளம் பெண் ஆனார்
அதற்கு முன் வரை,
அவள் என் மகள்,
ஆனால் இப்போது
நான் அவள் தந்தை.
மக்களே
நாம் மனித வரலாற்றைப்
பார்த்தால்,
அதில் பெண்களின் கதை
அநீதி
சமத்துவமின்மை
வன்முறை மற்றும் சுரண்டலின்
கதையாக இருக்கும்.
அதாவது
ஆணாதிக்க சமூகங்களில்,
ஆரம்பத்திலிருந்தே,
ஒரு பெண் பிறக்கும்போது,
அவளின் பிறப்பு
கொண்டாடப்படுவதில்லை.
அவளை யாரும் வரவேற்பதில்லை
தந்தை தாயாலும் கூட அல்ல.
அக்கம் பக்கத்தினர் வந்து
தாயுக்கு ஆறுதல்
கூறுகின்றனர்
தந்தையை வாழ்த்துவதில்லை.
மேலும் பெண்ணை
பெற்றதற்காக
அந்த தாய் மிகவும்
சங்கடப் படுகிறாள்
முதல் பெண் குழந்தையைப்
பெற்றெடுக்கும்போது,
அதாவது முதல் மகளுக்கு
அவள் வருந்துகிறாள்
இரண்டாவது மகளை
பெற்றெடுக்கும் போது,
அவள்
அதிர்ச்சியடைகிறாள்
ஒரு மகனை எதிர்பார்த்து,
மூன்றாவது மகளை
பெற்றெடுக்கும் போது,
ஒரு குற்றவாளியைப் போல
அவள் உணர்கிறாள்.
தாய் மட்டுமல்ல,
ஆனால் மகள்,
புதிதாக பிறந்த மகள்,
அவள் வயதாக ஆக
அவளும் அவதிப்படுகிறாள்.
ஐந்து வயதில்,
அவள் பள்ளிக்குச்
செல்ல முடியாமல்,
வீட்டில் தங்குகிறாள்
ஆனால் அவளின் சகோதரர்கள்
பள்ளி சேர்கிறார்கள்
12 வயது வரை, எப்படியோ,
அவளுக்கு நல்ல வாழ்க்கை
கிடைக்கிறது.
சந்தோஷமாக
இருக்க முடியும்.
அவள் தன் நண்பர்களுடன்
தெருக்களில் விளையாடலாம்,
அவள் தெருக்களில்
ஒரு பட்டாம்பூச்சி போல.
அழகாக சுற்றலாம்
ஆனால் பதின்ம வயதிற்குள்
அவள் நுழையும் போது,
அதாவது
13 வயதாகும்போது,
தன் வீட்டை விட்டு
ஒரு ஆண் துணை இல்லாமல்
வெளியே செல்ல
தடை விதிக்கப்பட்டுள்ளது
தன் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்
அடைத்து வைக்கப்படுகிறாள்
இனி அவள்
சுதந்திரமானவள் இல்லை
அவளுடைய தந்தை,
சகோதரர்களின்
மற்றும் அவளது
குடும்பத்தின்,
கற்பனையான மரியாதைக்கு
அடையாளமாகிறாள்
அந்த கற்பனை
மரியாதையை
அவள் மீறினால்
அவள் கொல்லப்படலாம்.
அந்த சுவாரஸ்யமான
கற்பனை மரியாதை
அப்பெண்ணின்
வாழ்வை மட்டுமல்ல
அக்குடும்பத்தில் உள்ள
ஆண் உறுப்பினர்களின்
வாழ்க்கையையும் பாதிக்கிறது
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில்
ஏழு சகோதரிகள்
மற்றும்
ஒரு சகோதரர் உள்ளார்.
ஏழு சகோதரிகளுக்கும்
தன் குடும்பத்திற்கும் உழைக்க
அவர் வளைகுடா நாட்டுக்கு
குடிபெயர்ந்தார்,
ஏனெனில் அவரது
ஏழு சகோதரிகள்
ஒரு திறமையைக் கற்று
வாழ்வாதாரத்தை சம்பாதிக்க
வீட்டை விட்டு வெளியே செல்வதை
அவமானகரமானதாக
அவர் நினைக்கிறார்
அதனால் இந்த சகோதரர்,
தன் வாழ்வின் சந்தோஷங்கள்
மற்றும் அவரது
சகோதரிகளின் மகிழ்ச்சியை
அந்த கற்பனை மரியாதைக்கு
தியாகம் செய்கிறார்
அந்த ஆணாதிக்க
சமூகத்திற்கு
மேலும் ஒரு
விதிமுறை உள்ளது
அதன் பெயர் கீழ்ப்படிதல்
ஒரு நல்ல பெண்
மிகவும் அமைதியாக,
தாழ்மையாக
மற்றும் மிக அடக்கமாக
இருப்பது
இதன் அளவுகோல்.
நல்ல பெண்ணுக்கு அடையாளம்
அமைதி
அவள் அமைதியாக தான்
இருக்க வேண்டும்
அவளுக்கு
விருப்பமில்லையெனினும்
தன் தாய், தந்தை
பெரியோர்களின் முடிவை
அவள் ஏற்றாக வேண்டும்
அவளுக்கு பிடிக்காத
ஒருவரை மணக்கவும்
அவர் வயதானவராக
இருப்பினும்
அவள் ஏற்க வேண்டும்
இல்லையேல் அவள்
அடக்க மற்றவள்
ஆகிவிடுவாள்
சிறு வயதிலேயே
மணமுடித்தாலும்
சம்மதிக்க வேண்டும்ம்
இல்லயேல் அடக்கமற்றவள்
ஆகிவிடுவாள்
இதன் முடிவு தான் என்ன?
ஒரி பெண் கவியின்
வரிகளில்
பெண் மணமுடித்து
படுக்கை பகிர்ந்து
மகன்கள் மற்றும் மகள்களை
பெற்றெடுக்கிறாள்
ஆனால் தன்
நிலைக்கு முரணாக
இந்த தாய்
மகளுக்கு
கீழ்ப்படிதலையும்
மகன்களுக்கு அதே கற்பனை
மரியாதையையும்
அவளே கற்பிக்கிறாள்
இந்த தீய சுழற்சி
தொடர்கிறது
மக்களே
கோடிக்கணக்கான
பெண்களின்
இந்நிலை
மாற்றப்படலாம்
நாம் மாறுபட்டு சிந்தித்தால்
பெண்களும் ஆண்களும்
மாறுபட்டு சிந்தித்தால்
பழங்குடி மற்றும் ஆணாதிக்க சமூக
ஆண்கள் பெண்கள்
வளரும் நாட்டு மக்கள்
சிந்தித்தால்
குடும்பம் மற்றும்
சமூகத்தின்
சில விதிமுறைகளை
மீற முடிந்தால்
பாரபட்சமான சட்டங்களை
ரத்து செய்ய முடிந்தால்
அதன் அமைப்புகளை
மாற்ற முடிந்தால்
பெண்களின் அடிப்படை
மனித உரிமைகளுக்கு
எதிரானவைகளை மாற்றினால்.
அன்பு சகோதர சகோதரிகளே,
மலாலா பிறந்தபோது,
முதல் முறையாக
நான் அவளை
பார்க்கிறேன்
புதிதாகப் பிறந்த குழந்தைகளை
நான் விரும்புவதில்லை
ஆனால் நான் சென்று
அவள் கண்களைப் பார்த்தபோது,
என்னை நம்புங்கள்
நான் மிகவும்
பெருமையடைந்தேன்
அவள் பிறப்பதற்கு முன்பே,
நான் அவள் பெயரைப்
தேர்ந்தெடுத்தேன்
ஆப்கானிஸ்தானில் புகழ்பெற்ற
சுதந்திர போராட்ட வீரர்.
ஒருவரின் வீரத்தால்
ஈர்க்கப்பட்டேன்
அவள் மைவாண்டினின்
மலாலாய்,
என் மகளுக்கு
அவள் பெயரிட்டேன்
அந்த சில நாட்கள்...
என் மகள் பிறந்தாள்,
என் உறவினர் வந்தார்
தற்செயலாக அவர்
என் வீட்டிற்கு வரும்போது
சந்ததிகளில் வரை படத்தை
கொண்டுவந்தார்.
யூஸஃப்ஸாய் சந்ததியின்
வரைபடம் அது
அவ் வரைபடம்
300 ஆண்டுகளுக்கு முந்தைய
என் முன்னோர்களின்
வரலாறை கொண்டிருந்தது
அதில் ஆண்களின்
பெயர்கள் மட்டுமே இருந்தது
எனது பேனாவை எடுத்தேன்
என் பெயரிலிருந்து
ஒரு கோடு வரைந்து,
"மலாலா" என்று எழுதினேன்.
அவள் வளர்ந்தாள்
அவளுக்கு
நான்கரை வயதாக இருந்தபோது,
நான் அவளை
என் பள்ளியில் சேர்த்தேன்.
இதை ஏன் குறிப்பிட வேண்டும்
என நீங்கள் ஏன் கேட்கலாம்
பெண்ணை பள்ளியில்
தானே சேர்த்தீர்கள்?
ஆமாம் சொல்ல வேண்டும்
வளர்ந்த நாடுகளான
கனடா, அமெரிக்காவில்
இது பெரிதல்ல
ஆனால் ஏழை நாடுகளில்,
ஆணாதிக்க,
பழங்குடி சமூகங்களில்
பெண் வாழ்வில்
இது ஒரு பெரிய நிகழ்வு.
பள்ளியில் சேர்வது
அவளையும்
அவளது பெயரையும்
அங்கீகரிப்பது போன்றது
பள்ளியில் சேர்வது
அவளின் கனவுகளுக்கும்
அபிலாஷைகளுக்கும்
அவளது எதிர்கால
வாழ்க்கைக்கான
திறன்களை ஆராய
ஒரு நுழைவு வாயில்.
எனக்கு
ஐந்து சகோதரிகள்
அவர்களில் யாரும்
பள்ளி செல்ல முடியவில்லை
சொன்னால்
ஆச்சரியப்படுவீர்கள்,
இரண்டு வாரங்களுக்கு முன்பு
நான் கனடிய விசா படிவத்தை
நிரப்பும்போது,
அப்படிவத்தின்
குடும்ப பகுதியில் நிரப்ப
எனது சில சகோதரிகளின்
குடும்பப்பெயர்கள்,
என்னால்
நினைவுபடுத்த முடியவில்லை
அதற்கு காரணம்
நான் ஒருபோதும் அவர்களின்
பெயர்களைப் பார்த்ததில்லை
எந்த ஆவணத்திலும் இதுவரை
எழுதப்பட்டதில்லை
அந்த ஒரு
காரணத்திற்காகவே
நான் என் மகளை
மதித்தேன்.
என் தந்தையால்
என் சகோதரிகளுக்கு
அவரின் மகள்களுக்கு
கொடுக்க முடியாததை
நான் மாற்ற நினைத்தேன்.
நான் என் மகளின்
புத்திசாலித்தனத்தையும்.
அறிவையும் பாராட்டுவேன்
என் நண்பர்கள் வரும்போது
என்னுடன் அமர
அவளை ஊக்குவித்தேன்
என்னுடன் வெவ்வேறு கூட்டங்களுக்கு
செல்ல ஊக்குவித்தேன்
இந்த நல்ல மதிப்புகள்
அனைத்தையும்
நான் அவளுடைய
ஆளுமையில் விதைத்தேன்
இது அவளூக்கு,
மலாலாவும் மட்டும் அல்ல.
நான் இந்த நல்ல மதிப்புகள்
அனைத்தையும்
என் பள்ளி, மாணவி மற்றும்
மாணவர்களுக்கும் வழங்கினேன்
கல்வியை விடுதலைக்காகப்
பயன்படுத்தினேன்.
நான் என் பெண்களுக்கு,
என் பெண் மாணவர்களுக்கு
கீழ்ப்படிதலின் பாடத்தை
மறக்க கற்பித்தேன்.
நான் என் மாணவர்களுக்கு
போலி மரியாதையை
உதற கற்பித்தேன்
அன்புள்ள சகோதர
சகோதரிகளே,
நாம் பெண்களின் அதிக
உரிமைகளுக்காக பாடுபடுகிறோம்
அதற்கும் மேலாக
சமுதாயத்தில் அவர்களுக்கு
அதிக இடம் கிடைக்க பாடுபட்டோம்
.ஆனால் நாங்கள்
ஒரு புதிய நிகழ்வைக் கண்டோம்.
இது மனித உரிமைகளுக்கு
ஆபத்தானது
குறிப்பாக பெண்கள்
உரிமைகளுக்கு ஆபத்தானது
இது தலிபமயமாக்கல்
என்று அழைக்கப்பட்டது.
அரசியல், பொருளாதார
மற்றும் சமூகம் என
அனைத்து நடவடிக்கைகளிலும்
பெண்கள் பங்கேற்பை
இது முழுமையான மறுத்தது
நூற்றுக்கணக்கான பள்ளிகள்
இழக்கப் பட்டது.
பெண்கள் பள்ளிக்கு செல்ல
தடைசெய்யப்பட்டனர்.
பெண்கள் முக்காடு அணிய
கட்டாயம் ஏற்பட்டது
சந்தைகளுக்குச் செல்லவும்
தடை வந்தது.
இசைக்கலைஞர்களை தடுத்தனர்
பெண்கள் அடித்து
நொறுக்கப்பட்டனர்
மற்றும் பாடகர்கள்
கொல்லப்பட்டனர்.
லட்சக்கணக்கான மக்கள்
துன்பப்பட்டனர்,
சிலரே எதிர்த்து பேசினர்,
அது மிகவும்
பயங்கரமான விஷயம்
கொலை செய்யும்,
அடித்து நொறுக்கும் ஆட்கள்
உங்களை சுற்றி இருக்கும்போது
உங்கள் உரிமைகளுக்காக பேசுவது
உண்மையில் மிகவும்
பயங்கரமான விஷயம்.
தனது 10 வயதில்,
மலாலா தன் உரிமைக்காக
கல்விக்காக நின்றாள்.
பிபிசி வலைப்பதிவிற்கு
தன் நாட்குறிப்பை எழுதினார்
நியூயார்க் டைம்ஸ்
ஆவணப்படங்களுக்கு
தானாக முன்வந்து
பேசினார்
தன்னால் முடிந்த அனைத்து
தளத்திலும் அவள் பேசினாள்.
அவளுடைய குரல்
மிகவும் சக்திவாய்ந்த குரலானது
அந்த குரல் உலகம் முழுக்க
உயர்ந்தது.
அதனால் தான் தலிபான்களால்
அவரது பிரச்சாரத்தை
பொறுக்க முடியவில்லை.
அக்டோபர் 9, 2012 அன்று,
அவள் நெருக்கமாக
தலையில் சுடப்பட்டாள்.
எனக்கும் என் குடும்பத்துக்கும்
அது ஒரு கரிய நாள்.
உலகமே ஒரு பெரிய
கருந்துளையாக மாறியது.
வாழ்க்கை மற்றும்
மரண விளிம்பில்,
என் மகள் இருந்தபோது
நான் என் மனைவியின்
காதுகளில் கேட்டது..
என் மற்றும் உங்கள் மகளுக்கு
நடந்ததற்கு நான் தான் காரணமா?
அவள் உடனடியாக குறுக்கிட்டு
"தயவுசெய்து உங்களை
குறை சொல்லாதீர்கள்
நீங்கள் சரியான
காரணத்திற்காக நின்றீர்கள்.
சத்தியத்திற்காக,
அமைதிக்காக
மற்றும் கல்விக்காக,
உங்கள் உயிரைப்
பணயம் வைத்தீர்கள்
உங்கள் மகள் உங்களிடமிருந்து
கற்றிருக்கிறாள்
உங்களுடன்
இணைந்திருக்கிறாள்.
ஒன்றாக சரியான
பாதையில் சென்றீர்கள்
கடவுள் அவளைப்
பாதுகாப்பார்." என்றார்
இந்த சில வார்த்தைகள்
எனக்கு நிறையப் உணர்த்தியது
அந்த கேள்வியை
மீண்டும் கேட்கவில்லை.
மலாலா மருத்துவமனையில்
இருந்தபோது,
அவள் கடுமையான
வலிகளை அனுபவித்தாள்
அவளின் முக நரம்பு
வெட்டப்பட்டதால்,
அவளுக்கு கடுமையான
தலைவலி இருந்தது
என் மனைவியின்
முகத்தில்
ஒரு இருண்ட நிழல் பரவியது
ஆனால் என் மகள்
ஒருபோதும் வருந்தவில்லை
அவள் எங்களிடம் சொன்னது
"என் உடைந்த புன்னகை
நன்றாக இருக்கிறது
முக உணர்வின்மையும்
பரவாயில்லை
கவலைப்பட வேண்டாம்"
என்பாள்
அவள் எங்களுக்கு
ஒரு ஆறுதல்,
அவள் எங்களை
ஆறுதல்படுத்தினாள்.
அன்புள்ள சகோதர
சகோதரிகளே,
மிகவும் கடினமான காலங்களில்,
நெகிழ்ச்சியுடன் இருக்க
அவளிடமிருந்து
கற்றுக்கொண்டோம்
இன்னொன்றை பகிர
நான் மகிழ்ச்சி அடைகிறேன்
குழந்தைகள் மற்றும்
பெண்களின் உரிமைகளுக்காக
உழைப்பவளாக
இருந்தாலும்
அவள் இன்னும்
16 வயது சிறுமி தான்
அவள் வீட்டுப்பாடம்
முடிக்காத போது அழுவாள்.
அவள் தன் சகோதரர்களுடன்
சண்டையிடுவாள்
அது எனக்கு மிகவும்
மகிழ்ச்சி தான்.
மக்கள் என்னிடம்
அதிகம் கேட்பது,
மலாலாவை எதற்கும் அஞ்சாது
குரல் கொடுக்கும் அளவுக்கு
மிகவும் தைரியமாக்கிய
உங்கள் வழிகாட்டலில்
சிறப்பு என்ன? என்பதே
நான் என்ன செய்தேன்
என்பதை விட
நான் என்ன செய்யவில்லை
என்று கேளுங்கள்.
அவளது சிறகுகளை வெட்டவில்லை
அவ்வளவுதான்.
மிக்க நன்றி.
(கைத்தட்டல்)
நன்றி. மிக்க நன்றி. நன்றி.
(கைத்தட்டல்)