நாம் -512 -ன் கன மூலத்தை கண்டறிய வேண்டும் அல்லது வேறு வழியில் சிந்தித்தால், நம்மிடம் ஒரு எண் உள்ளது, அதன் கன மூலம் -512 என்பதாகும். அப்படியென்றால், நாம் ஒரு எண்ணை மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால், நமக்கு -512 கிடைக்கும். எந்த எண் என்பதை கண்டறிய, நாம் இதனை பகாக்காரணி படுத்த வேண்டும். நாம் இதன் காரணிகளை கண்டறிவதற்கு முன்னர், நாம் இதன் எதிர்மறையை பார்க்கலாம். எனவே, -512 என்பதை மாற்றி எழுதுகிறேன், இது -1 பெருக்கல் 512 என்பதன் கன மூலம். அதாவது, -1 கனமூலம் பெருக்கல் 512 கனமூலம் என்பதற்கு சமம், இது நேரான வழியில் விடையளிக்கும். எந்த எண்ணை மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால், -1 கிடைக்கும்? -1! கிடைக்கும். இங்கு உள்ளது -1 -1 அடுக்கு 3 என்பது -1 பெருக்கல் -1 பெருக்கல் -1 அதாவது -1 என்பதாகும். எனவே, -1 என்பதன் கனமூலம் -1 தான். எனவே, இது -1 பெருக்கல் இந்த எண் பெருக்கல் 512 கனமூலம். எனவே, இதனை பகாக்காரணி படுத்தலாம். ஆக, 512 என்பது 2 பெருக்கல் 256 256 என்பது 2 பெருக்கல் 128 128 என்பது 2 பெருக்கல் 64 நாம் இங்கு மூன்று 2-களை பார்க்கிறோம். 64 என்பது 2 பெருக்கல் 32 32 என்பது 2 பெருக்கல் 16 இதில் பல இரண்டுகள் உள்ளன 16 என்பது 2 பெருக்கல் 8 8 என்பது 2 பெருக்கல் 4, மற்றும் 4 என்பது 2 பெருக்கல் 2. இதில் பல இரண்டுகள் உள்ளன. இதனை பெருக்கினால், 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 முறை இரண்டை பெருக்கினால், 512 கிடைக்கும் அல்லது 2 அடுக்கு 9 என்பது 512. இது கனமூலம் என்பதை விளக்கும் என்று நினைக்கிறேன். வேறு வழியில் இதனை சிந்திக்க வேண்டும் என்றால், நாம் இதில், இதில் கண்டிப்பாக 3 இரண்டுகள் உள்ளது, ஆனால், இதில் மூன்று குழுக்களாக இரண்டை பிரிக்க முடியுமா? அல்லது நாம் இதனை இதனை இவ்வாறு பாருங்கள். நாம் இதில் இரு இரண்டுகளை மூன்று குழுவாக பிரிக்கலாம். ஆக, அது 2 பெருக்கல் 2 என்பது 4 2 பெருக்கல் 2 என்பது 4 எனவே, இதில் 4 மூன்று முறை பெருக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று 2-களை மூன்று குழுக்களாக பிரிக்க முடிகிறதா என்று பார்க்கலாம். ஒன்று, இரண்டு, மூன்று. இதில் ஒவ்வொரு குழுவும், 2 பெருக்கல் 2 பெருக்கல் 2, அதாவது 8. இது தான் 8 இது 2 பெருக்கல் 2 பெருக்கல் 2, இதுவும் 2 பெருக்கல் 2 பெருக்கல் 2, எனவே, இது 8 நாம் இந்த 512 என்பதை 8 பெருக்கல் 8 பெருக்கல் 8 எனலாம். எனவே, நாம் இந்த வெளிப்பாடை மாற்றி எழுதலாம். 8 பெருக்கல் 8 பெருக்கல் 8 என்பதன் கனமூலம் எனலாம். இது -1-க்கு சமம் இது -1-க்கு சமம் நான் இங்கே ஒரு எதிர்மறை குறியை போடுகிறேன். -1 பெருக்கல் (8 பெருக்கல் 8 பெருக்கல் 8) என்பதன் கனமூலம். எனவே, நமது கேள்வி என்னவென்றால், எந்த எண்ணை மூன்று முறை பெருக்கினால், அல்லது மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால் 512 கிடைக்கும். 8 பெருக்கல் 8 பெருக்கல் 8 எனவே, இது 8. இது தான் விடை. இங்கு உள்ள இந்த பகுதியை எளிதாக்கினால் 8 கிடைக்கும். எனவே, நமது விடை -512-ன் கனமூலம் என்பது -8 ஆகும். அவ்வளவு தான். இதனை நீங்கள் சரி பார்க்கலாம். -8 என்பதை மூன்று முறை பெருக்குங்கள். நாம் செய்து பார்க்கலாம். -8 பெருக்கல் -8 பெருக்கல் -8 -8 பெருக்கல் -8 என்பது +64 நாம் இதனை -8 உடன் பெருக்கலாம். நமக்கு -512 கிடைக்கும்.