காலை வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? இது பெருமையாக இருக்கிறது அல்லவா? இங்குள்ள விடயங்களினால் நான் வியப்படைந்துள்ளேன். உண்மையில் நான் போகிறேன். (சிரிப்பு) இங்கு எல்லாமாக மூன்று கருப்போருள்களில் மகாநாடு நடைபெற்றுக்கொணடிருக்கிறது அல்லவா, நான் பேச வந்ததுடன் எது பொருத்தமானது? ஒன்றில் மனித படைப்பாற்றலின் அசாதாரண சாட்சியம் பற்றிய காட்சியளிப்பை கண்ணுற்றோம் அவை பல வகையானவை, பல தரத்திலானவை. இரண்டாவது, எதிர் காலம் சம்பந்தமாக என்ன நடக்கும் என்று எங்களால் எண்ண முடியாதளவில் எங்களை நிலைப்படுத்தியுள்ளது. ஒரு திட்டமும் இல்லை எப்படி இது செய்து முடிக்கப்படும்? நான் கல்வியில் ஆர்வம் உள்ளவன் -- உண்மையில், நான் அறிந்தது என்னவென்றால், எல்லோரும் கல்வியில் ஆர்வமுள்ளவர்கள். நீங்களும் அப்படித்தானே? இதை நான் ஆர்வமுள்ள ஒன்றாக பார்க்கிறேன். நீங்கள் ஒரு இராபோசன விருந்தில் இருந்தால், நீங்கள் சொல்லலாம் நீங்கள் கல்வி சார்ந்த வேலை செய்பவர் என்று, நிச்சயமாக, அதிக இராபோசன விருந்துகளுக்கு சென்றிருக்கமாட்டிர்கள், (சிரிப்பு) நீங்கள் அழைக்கப்படுவதில்லை. நீங்கள் ஏன் என்று திரும்ப கேட்டிருக்கமாட்டிர்கள், வினோதமானது, அது எனக்கு புதினமானது. ஆனால் கேட்டிருந்தால், நீங்கள் யாருக்காவது சொல்வீர்கள், உங்களுக்கு தெரியுமா, அவர்கள் சொல்கிறார்கள், ”நீங்கள் என்ன செய்கிறீ்ர்கள்?” நீங்கள் பதில் கூறுவீர்கள், நீங்கள் கல்வி சார்ந்த வேலை செய்வதாக. நீங்கள் அவர்கள் முகம் வெளுத்துப்பொவதையும், ”ஆ கடவுளே”, ”ஏன் நான்? என் ஓர் இரவு வீணாகி விட்டது என்பதையும் பார்க்கலாம் (சிரிப்பு) ஆனால் நிங்கள் அவர்களது கல்வியை பற்றிக் கேட்டால், அவர்கள் உங்களை இருத்திவைத்து விளக்குவார்கள். ஏனெனில் இது மக்களின் ஆழ்மனத்துடன் தொடர்புபட்ட மதம் அல்லது பணம் போன்றது நான் சொலவது சரியா? எனக்கு கல்வியில் மிகபெரிய ஆர்வம் உள்ளது. நான் நினைக்கிறேன் எங்கள் எல்லோருக்கும் உள்ளது. நாங்கள் அதில் மிக அதிக ஆர்வம் கொண்டுள்ளோம், ஏனென்றால், கல்வி தான் எங்களை, எங்களால் கிரகித்து கொள்ளமுடியாத எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லவல்லது. சற்று அதைப்பற்றி சிந்தித்தால், இந்த ஆண்டு பாடசாலையை தொடங்கும் சிறார்கள், 2065 இல் தான் வெளியேறுவார்கள், யாருக்கும் எந்த துப்பும் இல்லை -- கடந்த நான்கு நாட்களாக காட்சியளிக்கப்பட்ட எல்லா சிறப்பறிவுத்தன்மை இருந்தும் இந்த உலகம் இன்னும் ஐந்து வருடத்தில் எப்படி இருக்கும் என்று. ஆயினும் நாங்கள் சிறார்களை கற்பிக்கின்றோம். கணிப்பிட முடியாதது என நான் நினைக்கிறேன். இது அசாதாரணமானது. மற்றும் இதில் மூன்றாவது பகுதியானது நாங்கள் எல்லாரும் இணங்கியுள்ளது, வேறு எதுவுமில்லை, சிறுவர்களின் உண்மையான அசாதாரண கொள்திறன் அவர்களின் புதுமை படைப்புக்குகான கொள்திறன். நான் கருதுகிறேன் நேற்றிரவு சறினா ஒரு புதுமை. இல்லையா? அவளால் என்ன செய்யமுடியும் என பார்த்தால். அவள் அபூர்வமானவள், ஆனால் அவள் பேசுவதற்கு அப்படியில்லை, குழந்தை பிராயம் முழுமைக்கும் அபூர்வமானவள். அங்கு நீங்கள் திறமையை கண்டறிந்த ஒருவரின் அசாதாரணமான ஆழ்ந்த ஈடுபாட்டை கானமுடியும். இங்கு என் வாதம் என்னவென்றால், எல்லா சிறுவர்களுக்கும் பிரமாண்டமான திறமைகள் இருக்கின்றது. அதை நாங்கள் இரக்கமில்லாமல் வீணாகச் செலவழிக்கிறோம். எனவே நான் கல்வி பற்றி பேசவேண்டும் மற்றும் படைப்பாற்றல் பற்றியும் பேச வேண்டும். எனது வாதம் என்னவென்றால் படைபடபாற்றலானது கல்விக்கு எழுதப்படிக்க எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது. அதோடு நாங்கள் அதை சம அந்தஸ்தில் கையாள வெண்டும். (கைட்டல்கள்) நன்றி. உங்களுக்கு மிக்க நன்றி. (சிரிப்பு) எனவே 15 நிமிடங்கள் இருக்கின்றன. நல்லது, நான் பிறந்தது... இல்லை (சிரிப்பு) சமீபத்தில் நான் ஒரு சிறந்த கதை கேட்டேன் -- அதை சொல்வதில் எனக்கு விருப்பம் -- ஒரு வரைபட வகுப்பில் உள்ள சிறு பெண் பிள்ளை. அவளுக்கு ஆறு வயசு. அவள் கடைசி வரிகையில் வரைந்து கொண்டிருந்தாள். ஆசிரியர் சொன்னார் இந்த சிறு பெண் பிள்ளை இந்த வரைபட வகுப்பில் கவனக் குறைவாக இருக்கிறாள் என்று. ஆசிரியர் அவள் என்ன செய்கிறாள் என்று பார்கிற ஆர்வத்தில் ஆவளருகில் சென்று கேட்டார், ”நீங்கள் என்ன வரைகிறீர்கள்?” அந்த பிள்ளை சொன்னார்,”நான் கடவுளின் படத்தை வரைகிறேன்.” ஆசிரியர் சொன்னார். ”கடவுள் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது.” அப்பெண் பிள்ளை சொன்னாள், ”இன்னும் ஒரு நிமிடத்தில் அவர்களுக்கு தெரியும்.” (சிரிப்பு) எனது மகன் நாலு வயதாக இங்கிலாந்தில் இருக்கும் போது -- உண்மையில் அவன் எல்லா இடத்திலும் நான்கு, (சிரிப்பு) நாங்கள் கடுமையாக இருந்ததால், எங்கெல்லாம் அவன் போனாலும், அவன் அந்த ஆண்டில் நாலாகத்தான் இருந்தான். அவன் இயேசு பிறப்பு நாடகத்தில் நடித்தான். உங்களுக்கு அந்த கதை ஞாபகம் இருக்கிறதா? வேண்டாம் அது பெரியகதை. அது பெரிய கதை. மெல் கிப்சன் இரண்டாம் பாகத்தில் நடித்தார். நீங்கள் பார்த்திருப்பீர்கள், ”நேட்டிவிட்டி 2” ஆனால் ஜேம்சுக்கு ஜோசப்பின் பாத்திரம் கிடைத்தது, அது பற்றி நாங்கள் பரபரப்படைந்தோம். நாங்கள் அது ஒரு முன்னனி பாத்திரமாக கருதினோம் ”ஜேம்ஸ் ரோபின்சன் ஜோசப்பாக!” (சிரிப்பு) அவன் போசத் தேவையில்லை, ஆனால் மூன்று இராசாக்கள் பரிசில்கள் கொண்டு வரும் பொது அவர்கள் தங்கம், இது உண்மையில் நடந்தது. அங்கே நாங்கள் இருந்தோம் நான் நினைக்கிறேன், அவர்கள் வரிசை ஒழுங்கில் குழம்பிப் போனார்கள், எனெனில் நாங்கள் முடிந்தவுடன் அந்த சிறுவனிடம் பெசினோம், (சிரிப்பு) எப்படியாயினும், நாங்கள் ஸ்றாட்போட் இலிருந்து லோஸ் ஏஞ்சல்சுக்கு போனோம். எனது மகனுக்கு வர விருப்பம் இல்லை. எனக்கு இரு குழந்தைகள். அவனுக்கு இப்போது 21, எனது மகளுக்கு 16.